அந்தியூர்: அந்தியூர் சார்பதிவாளர் உள்பட மூன்று பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். அந்தியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, நான்கு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத, 67 ஆயிரம் ரூபாய், ஆவணங்களை கைப்பற்றினர். சார்பதிவாளர் சிவகுரு முருகன், உதவியாளர் ஜோதிவேல், ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் தங்கராஜ் உட்பட மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE