மொடக்குறிச்சி: கிட்னி பாதித்து, சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு, நிதியுதவி செய்வதாக, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் நிஷாந்த், 13; ஒன்பதாம் வகுப்பு மாணவன். இரு கிட்னிகளும் செயலிழந்த நிலையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் டயாலிசஸ் செய்து வருகின்றனர். கிட்னி மாற்றுவதற்கு போதிய வசதி இல்லாத நிலையில், மகனை காப்பாற்ற முடியாமல், சரவணன் தவித்தார். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. சரவணனின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட பலர், வங்கி மூலமாகவும், நேரிலும், ஒரு சிலர் மருத்துவமனைக்கே வந்து பணம் செலுத்தினர். இந்த வகையில், இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேல், சிறுவனுக்கு நிதி கிடைத்துள்ளது. இந்நிலையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, சிறுவனின் வீட்டுக்கு, நேற்று சென்றார். சிறுவனின் சிகிச்சைக்கு தானும் நிதியுதவி செய்வதாக பெற்றோரிடம் உறுதி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE