பவானி: பவானி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கான்ட்ராக்டர் பலியானார். நாமக்கல் மாவட்டம், வெப்படை, லட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன், 24; பெருந்துறையில், எலக்ட்ரிக்கல் பேனல் பாக்ஸ் தொழிலை கான்ட்ராக்டாக செய்து வந்தார். இவரின் மனைவி சத்யா, 22; பெற்றோரை பார்க்க அன்பழகன், வெப்படைக்கு டூவீலரில் நேற்று முன்தினம் வந்தார். நலம் விசாரித்து, பேசி விட்டு அன்றிரவே பெருந்துறைக்கு திரும்பினார். பவானி, லட்சுமி நகர் காவிரி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள், அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE