பவானி: ஈரோடு அருகேயுள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் கனகமணி. இவரின் மனைவி ஜாஸ்மின், 56; தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். வீட்டு வேலை செய்ய, பெருமாள்மலையை சேர்ந்த தேவி என்ற பெண், வந்து செல்வார். நேற்று முன்தினம் ஜாஸ்மின் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வேலைக்கு வந்த தேவி, மரக்கட்டையால் ஜாஸ்மினை தலையில் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழவே, அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் கடைக்கு சென்ற மகள் திரும்பி வந்தார். தலையில் ரத்த காயத்துடன் கிடந்த தாயை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அவர் புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடிவந்தனர், நேற்று அவரை கைது செய்து, ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE