அரூர்: அரூரில், வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, ஒன்றிய தலைவர் தங்கராஜி தலைமை வகித்தார். போராட்டத்தில், அரூர் அம்பேத்கர் நகர், பழையப்பேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, கே.கே.நகர், கீழானூர், கொத்தனாம்பட்டி, மேல்செங்கப்பாடி, பாளையம், பச்சினாம்பட்டி, ஜடையம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும். மேலும், குடிநீர், மயான வசதி வேண்டி, பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அரூர் தாசில்தார் செல்வகுமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE