ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் அப்துல்முனாப் மகன் சல்மான், 16. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி; கடந்த இரு மாதங்களுக்கு முன், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. இதனால் அவரது அண்ணன் இர்பான், 27, அஞ்செட்டி போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சல்மானை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE