ஓசூர்: அஞ்செட்டி அடுத்த பத்திகவுண்டனூரை சேர்ந்தவர் பாஸ்கர், 30. கூலித்தொழிலாளி; என்.புதூரில், தன் விவசாய நிலத்தின் அருகே உள்ள முத்தன் என்பவரது நிலத்தில், ராகி அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ராகி பயிரை வெட்டும் இயந்திரத்தில், பாஸ்கரின் வலது கை சிக்கியதில், அவரது மணிக்கட்டு பகுதிக்கு கீழ் துண்டானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement