கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, போகனப்பள்ளி முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணகிரி, 28; விவசாயி. இவரது தாய் ராஜாமணி, 48; இருவரும் நேற்று முன்தினம் காலை, 9:45 மணிக்கு, ஹீரோ ஹோண்டா பிளஸ் இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில், மத்தூர் கால்நடை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், அவர்களின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராஜாமணியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். அருணகிரி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE