பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, நீர்வரத்து வினாடிக்கு, 4,500 கன அடியாக சரிந்தது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 4,500 கன அடியாக சரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE