வாணியம்பாடி: வாணியம்பாடி, சார் பதிவாளர் அலுவலகத்தில், கணக்கில் வராத, 94 ஆயிரம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி, சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரம் பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் சென்றது. அதன்படி, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நடந்த சோதனையில், சார் பதிவாளர் கார்த்திகேயன், 50, என்பவரிடமிருந்து, கணக்கில் வராத, 94 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். மேலும், அவரது காரை சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையின்போது, பணியிலிருந்த, 15 ஊழியர் மற்றும் 14 புரோக்கர்களை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து, சார் பதிவாளர் கார்த்திகேயன் மீது, வழக்குப்பதிவு செய்து, துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE