பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதில், தமிழக - கேரளா எல்லையான கோபாலபுரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரோடு விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதனால், ஒரு பக்கம் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது.
கோபாலபுரம் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி சார்பில், தானியங்கி எடை மேடை அமைக்கும் பணிகள் நடக்கிறது. பல மாதங்களாக நடக்கும் பணியால், ரோடு அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எடை மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து ரோட்டை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'கோபாலபுரம் வழியாக கேரளாவுக்கு, அதிகளவு சரக்கு வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ரோடு பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன.இந்த பகுதியில் தானியங்கி எடை மேடை அமைக்கும் பணியால், ரோடு பணி தாமதமாகிறது என கூறப்படுகிறது. கோபாலபுரத்தில் ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE