நாமக்கல்: இடைநிலை ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்காக, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நாமக்கல்லில் நடந்தது. தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர், பட்டதாரி ஆசிரியராவதற்கு தகுதி இருப்பின், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், பணிப்பதிவேடு ஆகியவை சரிபார்க்கப்பட்டது. மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையில், பதவி உயர்வானது தகுதியானோருக்கு விரைவில் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE