நாமக்கல்: டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல்லில் அனைத்து விவசாயிகள் சங்க போராட்ட குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாமக்கல்-துறையூர் சாலை கொசவம்பட்டி நான்கு ரோட்டில் நடந்த, மறியல் போராட்டத்திற்கு, அனைத்து விவசாயசங்க போராட்ட குழு ஒருங்கிணைப்பாளார் பெருமாள் தலைமை வகித்தார். அதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களையும், மின்சார வரைவு மசோதாவையும் திரும்பபெற வலியுறுத்தியும், கோஷம் எழுப்பப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE