குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஐந்து மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் அருகே, சத்யா நகரில் வசித்து வந்தவர் அமுதா, 20. இவர் கணவர் சுப்பிரமணி, 25. கூலி தொழிலாளி. இருவருக்கும், 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அமுதா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இருவருக்கும், அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வெளியில் சென்று வீட்டுக்கு வந்த சுப்ரமணி, தன் மனைவி துப்பட்டாவால் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியுற்றார். குமாரபாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE