கரூர்: காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கூடாது என, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கடந்த, 2016 முதல், காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2017ல், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கில், அனைத்து குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டது. 2018ல், அமராவதி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. இருந்த போதும், ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. தற்போது மணல் குவாரிகள் திறக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றம் அனுமதி இல்லாமல், மணல் அள்ள அனுமதி அளிப்பது சட்ட விரோதமாகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE