சேலம்: ''ஊழலுக்கு எதிராக, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார்.
சேலத்தில் பா.ஜ., செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. பின், மாநில தலைவர் முருகன் அளித்த பேட்டி:இன்று முதல், 21ம் தேதி வரை, தமிழகத்தில், 1,000 இடங்களில், விவசாய சட்டங்கள் குறித்து, கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில், மத்திய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பேச உள்ளனர்.தி.மு.க., தவறான பிரசாரம் செய்ய முயற்சிக்கிறது.ஆனால், தமிழக விவசாயிகள் தெளிவானவர்கள். அதனால் தான், அவர்கள் நடத்திய, 'பந்த்'துக்கு கூட ஆதரவு கிடைக்கவில்லை.விவசாய உதவித்தொகையில், போலி பயனாளிகள் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்ததே, பா.ஜ., தான்.
ஊழலுக்கு எதிராக, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ல் தனியாகத்தான் போட்டியிட்டோம். அதிலேயே, 35 இடங்களில், இரண்டு அல்லது மூன்றாமிடம் வந்தோம். 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவு, கணிசமாக ஓட்டுகள் வாங்கியிருந்தோம்.இதன் அடிப்படையில், வரும் தேர்தலில், கூட்டணியில் சீட்கள் வாங்க வலியுறுத்துவோம்.பா.ஜ., தொண்டர்களை நம்பியுள்ள கட்சி. இதற்கு, 'பி, ஏ' அணி என, யாரும் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE