சென்னை:''செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னையில் தான் இருக்க வேண்டும். அதை வேறு பல்கலையுடன் இணைக்கும் முடிவை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க., சார்பில், 'தமிழகம் மீட்போம்' என்ற தேர்தல் பிரசார கூட்டம், நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:தமிழ் மொழியையும், தாய் நாடான இந்தியாவையும், பாரதியார் இரு கண்களாகப் பாவித்தார் என, பிரதமர் மோடி, பாரதியார் பிறந்தநாள் விழாவில் பேசி இருக்கிறார். அந்தத் தமிழ் மொழிக்காக, உருவாக்கப்பட்ட செம்மொழி ஆய்வு நிறுவனம், இப்போது, எந்த நிலையில் இருக்கிறது என்பது பிரதமருக்கு தெரியுமா? அந்நிறுவனத்திற்கு நிதி தராமல், ஆய்வு பணிகள் செய்ய விடாமல், உரிய அலுவலர்களை நியமிக்காமல், அந்த நிறுவனத்தையே பாழ்படுத்தி விட்டனர்.அந்நிறுவனம், சென்னையில் தான் இருக்க வேண்டும். அதை வேறு பல்கலையுடன் இணைக்கும் முடிவை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE