கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த, குப்பம் பஞ்சாயத்தில் உள்ள, உப்பு பாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில், வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நேற்று முன்தினம், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE