குளித்தலை: காவல்காரன்பட்டியில், கல்லூரி மாணவி மாயமானார். குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னையன். இவர் மனைவி அன்னக்கிளி, 50, இவர்களுடைய மகள் சவுந்தர்யா, 23, திருச்சி பாரதிதாசன் பல்கலையில், பி.ஏ., படித்து வருகிறார். கடந்த, 6ல் காலை வீட்டில் இருந்தவர், திடீரென காணவில்லை, பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தாய் அன்னக்கிளி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE