சென்னை:வானவில் பண்பாட்டு மையம் நடத்தும், பாரதி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில், இம்மாதம், 11ம் தேதி முதல், பாரதி விழா கொண்டாடப்படுகிறது. துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், தமிழறிஞர்கள் பங்கேற்று, பாரதியாரின் ஜதிப்பல்லக்கை சுமந்தனர்.அன்று மாலை, பாரதி விருது வழங்கும் விழாவில், பிரதமர் மோடி, சீனி விஸ்வநாதனுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, விருது வழங்கினார்; முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்தினார். நிகழ்ச்சி தினமும் காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இணையவழியில் நடக்கிறது.இன்றைய நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், வரும், 20ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், அவர் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE