வேலூர்: தொடர் உண்ணாவிரதத்தால், உடல் நிலை பாதித்த ராஜிவ் கொலையாளி முருகனுக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜீவசமாதி அடைய கோரிக்கை விடுத்த முருகன் நேற்று, 24வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலை சோர்வடைந்தால், பல முறை மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால், நேற்றிரவு, 7:00 மணிக்கு, வேலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரவு, 8:00 மணிக்கு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், முருகன், நளினியை நேற்று பார்க்க வந்த, அவரது வக்கீல் புகழேந்தியை சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறுகையில், ''முருகனின் உடல் நிலை குறித்து வெளியே தெரிந்து விடும் என்பதால், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. அதேபோல, முருகன் உடல் நிலை குறித்து, நளினியிடம் தெரிவித்து விடுவோம் என்ற எண்ணத்தில், அவரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE