சிவகங்கை : சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த எல்.ஐ.சி., பி.எப்., தொகை ரூ.45 லட்சத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி கமிஷனர் அய்யப்பனிடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை நகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர் 82 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 10 பேர்களை அலுவலகத்தில் நியமித்துள்ளதால், துாய்மை பணியில் 72 பேர் மட்டுமே உள்ளனர். மேலும், குப்பை சேகரிக்க போதிய பேட்டரி வண்டிகள் இன்றி, பழுதடைந்துள்ளன. கடந்த சில ஆண்டாக துாய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு கடன், எல்.ஐ.சி., லோன், பி.எப்., தொகை என 45 லட்ச ரூபாய் வரை ஊழியர்களின் கணக்கில் காட்டாமல் உள்ளனர். கூட்டுறவு வங்கி, எல்.ஐ.சி., பி.எப்., அலுவலகத்தில் செலுத்தாமல்உள்ள தொகையை நகராட்சி நிர்வாகம் விரைந்து செலுத்த வேண்டும் என வலியுறுத்தி கமிஷனரிடம், சி.ஐ.டி.யு.,அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வீரையா கூறியதாவது:
2003ம் ஆண்டுக்கு பின் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சி.பி.எஸ்., திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை கருவூலகத்தில் செலுத்த வேண்டும்.பி.எப்., தொகைக்கான வட்டி 2009 முதல் வழங்காமல் உள்ளதை வழங்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்துஉள்ளார், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE