கூடலுார் : கூடலுாரில் கொரோனா ஊரடங்கு நாட்களில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி, போலீஸ், மருத்துவத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கூடலுார் மக்கள் மன்றம், பிரண்ட்ஸ் கேபிள், மார்ஸ் பெட்ரோல் பங்க் சார்பில் இவ்விழா மக்கள் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, செயலாளர் கஜேந்திரன், ஆலோசகர் பாண்டியராஜன், கவுரவத்தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் லோகேந்திரன் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சிறப்பு எஸ்.ஐ., அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் முருகன், உதவி மின் பொறியாளர் உதயகாந்த் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோருக்கு உத்தமபாளையம் டி.எஸ்.பி.,சின்னகண்ணு விருது வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE