காஞ்சிபுரம் : கொரோனா முழு ஊரடங்கின்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி என்.சி.சி., மாணவியருக்கு, பாராட்டு விழா நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது, காஞ்சிபுரத்தில், பல பிரதான தெருக்களில், தடுப்புகள் அமைக்கப்பட்டன.அப்போது, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியின், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஒன்பது மாணவியர், பொது இடங்களில் போக்குவரத்தைச் சீரமைப்பது, அத்தியாவசிய மளிகை, காய்கறி, சந்தைகளில், பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்திலும் சேவையாற்றிய இம்மாணவியருக்கு, கல்லுாரியில் நேற்று முன்தினம், பாராட்டு விழா நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் ஸ்ரீமதி ராமலிங்கம், மாணவியருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.கல்லுாரி குழு உறுப்பினர் முனைவர் ஆர்.தங்கம், தேசிய மாணவர் படை அலுவலர் என்.உமா, பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE