ஆர்.கே.பேட்டை : ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு, தடுப்பு இல்லாத நிலையில், ஏரியில் முழு அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனால், சாலை மட்டத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவ்வழியாக பயணிப்பவர்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தின், மேற்கு பகுதியில் ஏரி உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.கிராமத்திற்கான பாதை, ஏரியின் நடுவே உள்ளது. சாலைக்கு தடுப்பு சுவர் இல்லை. இதனால், சாலையின் மட்டத்திற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இவ்வழியாக செல்பவர்கள், சாலையை விட்டு சற்றே விலகினாலும், ஏரியில் மூழ்க வேண்டிய அபாய நிலை உள்ளது.இதனால், வெள்ளாத்துார் மக்கள், அச்சத்தில் தவித்து வருகின்றனர். சாலையின் இருபக்கமும், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE