பிஞ்சிவாக்கம் : பிஞ்சிவாக்கம் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அறை கேட்டு, ஊராட்சி மன்ற தலைவர், கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்துள்ளார்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பிஞ்சிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள, பிஞ்சிவாக்கம் கண்டிகை மற்றும் சகாயபுரம் ஆகிய பகுதியில், சில தினங்களாக பெய்த கன மழையால், கூவம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அறை சேதமடைந்தது.இதனால், பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில், இரண்டு ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் மோட்டார் அறை கட்டுவதற்கு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளிக்க, ஊராட்சி மன்ற தலைவர் உமா சென்றார்.
தற்போது, கொரோனா வைரஸ் பரவலால், மக்கள் குறை தீர்க்கும் நாளில், கோரிக்கை மனு அளித்துள்ளார். அதிகாரிகளும், மனுவை பெற்றுக் கொண்டதாக, சான்றளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE