திருப்போரூர் : திருக்கழுக்குன்றத்தில், வரி பாக்கியை வரும், 31க்குள் செலுத்த வேண்டும் என, செயல் அலுவலர் மு.திருஞானசம்மந்தம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின், 18 வார்டுகளில் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகை, குடிநீர் கட்டணங்கள், உரிம கட்டணங்கள் அனைத்தும், டிச., 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.தவறும்பட்சத்தில், செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு, நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE