'பா.ஜ.,வினரின் துாக்கம்!'
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், கோவையில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'வேளாண் சட்டத்திற்கு எதிரான, எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்கவும், விவசாயிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இடைத்தரகர்களின் முகத்திரையை கிழிக்கவும், பா.ஜ., தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளும். தமிழகம் முழுதும், கிராமம் கிராமமாக, பா.ஜ., நிர்வாகிகள் சென்று, வேளாண் சட்டத்தின் நன்மைகளை விளக்கிக் கூறுவர்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், '20 நாட்களைத் தாண்டி, போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு... இதுநாள் வரை, பா.ஜ.,வினர் துாங்கினாங்களோ...' எனக் கேட்கவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE