சென்னை:போலி ஜி.எஸ்.டி., 'பில்' வாயிலாக, 10 கோடி ரூபாய் வரி மோசடி செய்த மூவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னையில் பிரபல நிறுவனம், பல்வேறு சில்லரை கடைகள் வாயிலாக, ரெடிமேடு ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட மூன்று பேர், பல மாதங்களாக, ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக, அவர்களுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில், ஜி.எஸ்.டி., புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில், ஜி.எஸ்.டி.,யில் வரி சலுகை பெறுவதற்காக, உண்மையான பொருட்களை வினியோகம் செய்யாமல், 150 கோடி ரூபாய்க்கு போலி 'பில்' தயாரித்து, 10 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகை பெற்றுள்ளனர்.இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE