சென்னை:தமிழக அஞ்சல் துறையில், சிறந்த சேவையாற்றிய மண்டல வர்த்தக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், 'மேக துாத்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஊழியர்களை கவுரவித்து, ஊக்கப்படுத்தும் வகையில், 'மேக துாத்' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை பெறுபவர்களுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ், 21 ஆயிரம் ரூபாய் ஆகியவை, டில்லியில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு, கொரோனா தொற்று பாதுகாப்பை முன்னிட்டு, காணொலி காட்சி வாயிலாக, விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்று, விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில், 'மேக துாத்' விருது, சென்னை மண்டல வர்த்தக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. அவரை, தமிழக அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன், தமிழக வட்ட மெயில் பிரிவு தலைவர் சாருகேசி ஆகியோர் பாராட்டி, சான்றிதழ் வழங்கி, கவுரவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE