ஊட்டி : 'அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறந்து பாடங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.
ஊட்டியில் உள்ள பிரீக்ஸ் உட்பட சில பள்ளிகளில், 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்தப்படுகிறது.கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு,குழந்தைகளை அனுப்ப மறுத்தாலும், பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக, பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறுகையில்,''மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால், பள்ளிக்கு சென்று குறிப்பிட்ட நேரத்தில் விளக்கம் கேட்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டு மாணவர்களை அமர வைத்து பாடம் எடுக்க அனுமதி இல்லை.அரசு உத்தரவு எதும் வரவில்லை. பாடம் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE