அன்னுார் : அன்னுார் தாலுகாவில், 120 பவுண்டரிகளும் நேற்று மூடப்பட்டன.பவுண்டரிகளுக்கு தேவையான மூலப்பொருட்களான பிக் அயர்ன் மற்றும் ஸ்கிராப்கள் 26 சதவீதமும், கோக் 12 சதவீதமும், சிலிகான் காஸ் 166 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது. இதனால் பவுண்டரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்று கூறி, கோவை சிறு குறு பவுண்டரி அதிபர்கள் சங்கம், 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து, அன்னுார் தாலுக்காவில் உள்ள கரியாம்பாளையம், கணேசபுரம், அச்சம்பாளையம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள, 120 பவுண்டரிகளும் நேற்று செயல்படவில்லை. வேலை நிறுத்தம் தொடர்ந்தால், இன்ஜினியரிங் தொழிற்சாலைகளுக்கு தேவையான காஸ்டிங் கிடைக்காத நிலை ஏற்பட்டு, சிறு, குறு தொழிற்சாலைகளும் பாதிக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE