பொள்ளாச்சி : பொள்ளாச்சி, குரும்பபாளையம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குரும்பபாளையம் வழியாக, மேற்கு நோக்கி செல்லும் ஓடையின் குறுக்கே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கடந்த, 2018 - 19ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஓடையில் நீர் பெருக்கெடுத்ததால், தடுப்பணை நிரம்பியது. அதன்பின் நீர்மட்டம் சரிந்தது.தற்போது, வடகிழக்கு பருவமழைக்கு ஓடையில் மீண்டும் நீர் பெருக்கெடுத்து, தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஓடையின் குறுக்கே கூடுதலாக, 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து தடுப்பணைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கான, கட்டுமானப்பணி நடக்கிறது. தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பும் பட்சத்தில், மூன்று கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE