பொள்ளாச்சி : மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் மின்வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு, உடுமலை மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். பொள்ளாச்சி மின்கோட்ட செயற்பொறியாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.பேரணிக்கான ஏற்பாடுகளை, உதவி செயற்பொறியாளர்கள் குழந்தைவேல், அன்புமணி, விஜயகுமார் செய்திருந்தனர்.பல்லடம் ரோட்டில், ராஜேஸ்வரி மகால் அருகே புறப்பட்ட பேரணி, நியூஸ்கீம் ரோடு வழியே வந்து, காந்தி சிலையில் நிறைவடைந்தது. பேரணியில், மின் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் ஏந்தி வரப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE