பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி லட்சுமி நகருக்கு தனி 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க வேண்டும்,' என, சேரன் நகர் மக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சேரன் நகர் மக்கள் கொடுத்த மனு:பொள்ளாச்சி சேரன் நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின் சப்ளை டிரான்ஸ்பார்மரில் இருந்து, லட்சுமி நகர், முருகன் லே - அவுட்உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.இதனால், சேரன் நகரில் மின்சப்ளை தடைபடுகிறது. இது குறித்து, மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், லட்சுமி நகரில், தனி 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE