திருப்பூர் : கொரோனா ஊரடங்கு தளர்வில் பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், அவை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பூங்காவை திறக்க உத்தரவிடப்பட்டது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி, வெள்ளி விழா பூங்கா திறக்கப்பட்டது. முன்னதாக கடந்த பல மாதமாக பராமரிப்பின்றி இருந்த பூங்கா வளாகம் முழுவதும் துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், மக்களிடம் போதிய ஆர்வமில்லை. இதனால், பூங்காவில் உள்ள ராட்டினம் உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இயங்கவில்லை.பல மாதங்களுக்கு பின் பூங்கா திறக்கப்பட்டதால், பார்வையாளர்கள் வருகை குறைவாக உள்ளது. விடுமுறை நாளில், வழக்கமான கூட்டம் வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE