நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் பல நாட்களாக வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் பத்து நாட்களாக பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் நகராட்சி மூலம் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றினர். திருக்கண்டேஸ்வரம் புது காலனியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து, கொசுக்கள் அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கு நோய் பரவுவதற்குள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE