சேத்தியாத்தோப்பு; பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணி மந்தமாக நடப்பதால் சேறும் சகதியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணி கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் துவங்கியது. விருத்தாசலத்திலிருந்து 47 கி.மீ., துாரமுள்ள சாலை பூதாமூரில் துவங்கி கோபாலபுரம், கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, புவனகிரி வழியாக பரங்கிப்பேட்டை வரை சென்று முடிகிறது.சாலை விரிவாக்கப் பணிகளை, ஒப்பந்தம் பெற்ற கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணா நிறுவனம் கடந்த 2017ல் திடீரென நிறுத்தியது. பின்னர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட சிறு பாலங்கள், இடைவெளி விடப்பட்ட சாலை போடும் பணி நடக்கிறது. தற்போது பெய்த மழையால் சாலையில் பெரிய பள்ளங்கள் உருவாகி சேறும் சகதியுமாக மாறியது.இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.மந்தமாக நடந்து வரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE