திருப்பூர் : 'இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி' சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கை கழுவும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி' கிளை சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'சானிடைர்' மற்றும் தண்ணீரால் கைகளை கழுவும் கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'டீன்' வள்ளி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்.மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், 'ரெட் கிராஸ்' மாவட்ட செயலாளர் தாமோதரன், இணை செயலாளர் புருேஷாத்தமன், வைத்தியநாதன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE