திருப்பூர் : குடியிருப்பு பகுதியில், சேகரமாகும் குப்பை முறையாக அகற்றாமல் அதேயிடத்தில் தீ வைக்கப்படுகிறது. இதனால், சுற்றுப்பகுதியினர் கடும் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டுகளில் தினமும் சராசரியாக, 500 மெட்ரிக் டன் அளவு குப்பை சேகரமாகிறது. இவை பிரிக்கப்பட்டு, மக்காத குப்பை சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புதல், அருகாமையில் உள்ள பாறைக்குழியில் நிரப்புதல் என அழிக்கப்படுகின்றன.அவ்வகையில், ஊத்துக்குளி ரோடு - ரயில்வே பாதையை ஒட்டி, எம்.ஜி.ஆர்., நகர் செல்லும் வழியில், பாதையோரம் குப்பை சேகரிக்கும் இடம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளும், பொதுமக்கள் அங்கு கொண்டு வந்து கொட்டிச் செல்லும் குப்பையும் நிறைந்து காணப்படுகிறது.
இவ்வாறு, நீண்ட நாள் சேர்ந்து தேங்கிக் கிடக்கும் குப்பையில் சில சமயங்களில் ஊழியர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால், குப்பையிலிருந்து கடும் புகை கிளம்பி சுற்றுப்பகுதி முழுவதும் பரவுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் தடுமாற்றத்துக்கு ஆளாகின்றனர். காற்றில் பரவும் புகையால் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகின்றனர்.எனவே, குடியிருப்பு பகுதியில், இவ்வாறு மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE