திருப்பூர் : திருப்பூர் மண்டல போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
காயத்ரி மஹாலில் நடந்த கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன் வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். போக்குவரத்து கிளையில் பல்வேறு கருத்துவேறுபாடு நிலவுவதால், தனித்தனியாக அணிகளை அழைத்து பேசி, குறைகளை கேட்டறிந்தார்.போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும். தேவையான உதவி பெற்றுத்தரப்படும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE