கோவை : பள்ளிகள் திறந்த பிறகு எவ்வித அச்சமும் இன்றி, மாணவர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இணையவழி பயிற்சி, நேற்று துவங்கியது.
வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பில், கொரோனா தொற்றுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கும் பட்சத்தில், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான, இணையவழி பயிற்சி நடக்கிறது.இதில், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், உளவியல் சார்ந்த பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், வகுப்புகள் கையாளப்படுகின்றன.
பிரிவு வாரியாக துவங்கிய இப்பயிற்சியில், நேற்று தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE