கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தின் மேற்கூரையில் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர்.கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டட வளாகத்திற்குள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 1987ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடம் பழுதாகி, மேற்கூரையில், இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.இதனால், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். மேலும், பணி நிமித்தமாக அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்களும் பீதியடைகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கட்டடம் முழுதும் ஒழுகும் நிலை ஏற்படும்.எனவே, பழுதடைந்த கட்டடத்தை முற்றிலுமாக அகற்றி, விபத்து ஏற்படுவதற்கு முன் கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE