விழுப்புரம்:மருத்துவ, 'சீட்' வாங்கி தருவதாக, எஸ்.ஐ.,யிடம், 62 லட்சம் ரூபாய் மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த சிறப்பு எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்.ஐ., சுந்தரராஜன், 57. தன் மகனுக்கு மருத்துவ, 'சீட்' வாங்குவதற்காக, அதே பகுதியில் உள்ள சிறப்பு எஸ்.ஐ., ரவிச்சந்திரன் மற்றும் பள்ளிபாளையம் முரளிசங்கர் ஆகியோரை அணுகினார்.அவர்கள் மூலம், விழுப்புரம் மாவட்டம், உப்புவேலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மகன் சீனிவாசன் ஆகியோரை, 2019ல் சந்தித்தார்.
சுந்தர்ராஜனிடம், 62 லட்சம் ரூபாயை பெற்ற பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன், இதுவரை மருத்துவ சீட் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. நேற்று முன்தினம், பன்னீர்செல்வத்திடம் சுந்தரராஜன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். பன்னீர்செல்வம், சுந்தர்ராஜனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகார்படி, பன்னீர்செல்வம், சிறப்பு எஸ்.ஐ., ரவிச்சந்திரன் உள்ளிட்ட நால்வர் மீதும், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE