கள்ளக்குறிச்சி: தொழில் நுட்பக் கோளாறினால் ரேஷன் கடைகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பயோ மெட்ரிக் முறை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க பாயிண்ட் ஆப் மெஷின் (பி.ஓ.எஸ்.,) வழங்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதில், குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கைரேகையினை பதிவு செய்தால் மட்டுமே, அத்தியாவசிய பொருட்களைப் பெற முடியும்.இதற்காக, பி.ஓ.எஸ்., இயந்திரத்தை தரம் உயர்த்தி, அதனுடன் பயோமெட்ரிக் கருவி வழங்கப்பட்டு, அக்டோபர் 7ம் தேதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
பயோ மெட்ரிக் இயந்திரத்தில், சிலரின் கைரேகைகள் பதிவாகாததாலும், 'டவர்' கிடைக்காததாலும் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால், அக்டோபர் 16ம் தேதி முதல், பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரேஷன் கடைகளில் சில தினங்களாக பயோ மெட்ரிக் முறை மீண்டும் நடைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE