ராமநாதபுரம் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் 20 நாட்களாக விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் மூன்றாவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழக பெண்கள் விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர் ராமலெட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு, அனைத்து விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, காங்., மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவி கண்ணகி உட்பட பலர் பங்கேற்றனர். நவாஸ்கனி எம்.பி., போராட்டத்தை ஆதரித்து பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE