ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர்சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, துணைத் தலைவர் கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடை, மாத ஓய்வூதியம் ரூ.2000 தொகையை 2017 முதல் நிலுவைத் தொகையுடன் கணக்கிட்டு வழங்க வேண்டும்.மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த துாய்மைப் பணியாளர், துாய்மை பணியாளருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.முதல்வர் அறிவித்தபடி துாய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு அரசாணை வெளியிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE