திருக்கனுார்: புயல் காரணமாக திருக்கனுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கதிர் வந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.இந்நிலையில், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, வம்புப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கொடாத்துார் கிராமங்களில் சம்பா பட்டத்தில் 500 ஏக்கர் அளவிற்கு விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.பயிர் நன்கு வளர்ந்து கதிர் வந்து பால் வைக்கும் நேரத்தில்,புயல் காரணமாக சூறைக்காற்று வீசியது. அதில், நெற்பயிர்களின், கதிர்களில் கருப்பு அடித்து, பதர்களாக மாறியுள்ளது.இதனால் கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 30ல் இருந்து 35 மூட்டைகள் வரைஅறுவடை செய்த நிலையில், தற்போது பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்து வைக்கோலுக்கு மட்டுமே பயன்படும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.ஆகையால்,தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்குவது போன்று,புயல் காற்றால் நெற்கதிர் வந்து சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE