சென்னை:ஐக்கிய அரபு நாடான, யு.ஏ.இ.,யின், துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருந்து, சென்னை வந்த, நான்கு வெவ்வேறு விமானங்களில் வந்த 10 நபர்களை அதிகாரிகள் சோதனை யிட்டனர்.அவர்களிடமிருந்து, 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.77 கிலோ தங்க கட்டிகள், செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, துபாய் செல்லும், 'பிளை துபாய்' விமான பயணியரை, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில் செல்ல வந்த, சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன், 29, என்பவரை சோதனையிட்ட போது, அவரது உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5.13 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் மற்றும் சிங்கப்பூர் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE