சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தகுதி உடையோருக்கு வேட்டி - சேலை வழங்கப்பட உள்ளதால், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகளில், பணம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட, பரிசு பொருட்கள் வழங்குகின்றன.அதேபோல், 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும், பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. வருவாய்த்துறை வழியாக, வேட்டி - சேலை வழங்கப்படும். பொங்கல் பண்டிகை, நெருங்கி வரும் நிலையில், பரிசு தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை, தீவிரமாக நடக்கிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்தில், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில், வேட்டி - சேலை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அரசு உத்தரவையடுத்து, தகுதி உடையோருக்கு வேட்டி - சேலை வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE